பெண் மொழி
நருங்கின உறவினர் குறித்த துயரச் செய்தியைக் கேட்டதும், பால் குடித்துக்கொண்டிருந்த தன் கைக் குழந்தையை வாரியெடுத்துக் கொண்டு புறப்பட்டாள், அந்தப் பெண். பேருந்தில் ஏக நெரிசல். அது நிறுத்தத்தில் சில நிமிடங்களே நிற்கும் என்பதால் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவசர அவசரமாகக் க¦ழிறங்கினாள். தன்னை மறந்து உறவினர் வ¦ட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்துகொண்டிருந்த அவளை சாலையோரமாக நின்றுகொண்டிருந்த விடலைப் பையன்கள் வெறித்துப் பார்த்தார்கள். சிலர் பச்சையாக உறவுக்கு அழைத்தார்கள். சில ஆண்கள் ஓரக் கண்ணால் பார்த்து விட்டு கண்டும் காணாதது போலிருந்தார்கள். சிலர் தலையில் அடித்துக்கொண்டார்கள். ஒரே ஒரு கிழவி மட்டும், "ஏய், மூடிக்கிட்டுப் போ!" என்றாள். குனிந்து பார்த்தாள் அந்தப் பெண். குழந்தை பால் குடித்துக்கொண்டிருந்ததால் அவள் ரவிக்கை திறந்து கிடந்தது. அப்போதுதான் நினைவு வந்தவளாவாக "ஐயோ! என் குழந்தை!" என்று அலறிக்கொண்டு பஸ்ஸை நோக்கி ஓடினாள் அவள்.
பெண்களின் மார்பகங்களைப் பார்க்கும் போது ஆண்களுக்குக் கட்டில் ஞாபகம் வருகிறது. பெண்களுக்கோ குழந்தை ஞாபகம் வருகிறது என்று சொல்ல முற்படும் இந்தக் கதையை எப்போதோ படித்திருக்கிறேன். ஆனால் அது இப்போது அடிக்கடி ஞாபகம் வருகிறது.
ஓராண்டுக்கு மேலாகப் பெண் மொழி என்பதைப் பிரப்சினையாக வரித்துக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள இதழ்கள் கட்சி கட்டிக்கொண்டு சாமியாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு பெண் கவிஞர் முலைகள் என்று தன் கவிதைத் தொகுப்புக்கு பெயர் சூட்டி வெளியிட்டார். அப்போது ஆரம்பித்தது இந்த சர்ச்சை. உறுப்புக்களைப் பற்றியும் உடல் உறவைக் குறித்தும் பெண்கள் எழுதுவதை விமர்சிக்கும் ஆண் எழுத்தாளர்களைப் பற்றி இன்னொரு பெண் கவிஞர் வெளியிட்ட கருத்துக்கள் இந்தச் சர்ச்சையை கொழுந்துவிட்டு எரியச் செய்திருக்கிறது. உடல்மொழி/ பெண்மொழி என்று இந்த சர்ச்சை இந்தியா டுடே, தினமணி, குங்குமம், கணையாழி, அமுதசுரபி, குமுதம் குடும்பத்தை சேர்ந்த த¦ராநதி, தலித் முரசு, மனுஷி என நோக்கிலும், தரத்திலும், வேறுபட்டு நிற்கும் பல பத்திரிகைகளில் இந்த சர்ச்சை இடம் பெற்று வருகிறது.
காலங்காலமாக ஆண்கள் பெண்களது அங்கங்களைப் பற்றி எழுதி வந்திருக்கிறார்கள். நாங்கள் எழுதுவதில் என்ன தவறு என்று பெண்நிலைவாதிகள் வாதிடுகிறார்கள். இது மதவாத வலதுசாரிகள் வற்புறுத்துகிற கட்டுப்பெட்டித்தனத்திற்கு எதிரானது என்ற எண்ணத்தில் இடதுசாரிகள் இந்தக் குரல்களை ஆதரித்து மேடைகளில் பேசி வருகிறார்கள். இப்படியெல்லாம் எழுதக் கூடாது என்று சொல்வது ஒருவகைத் தணிக்கை, கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மனோபாவம் என்று கருதுகிறவர்கள் இந்தப் போக்கை அதிகாரத்திற்கு எதிரான ஒரு குரலாகப் பார்க்கிறார்கள். இதனால் பெண்நிலைவாதிகள், இடதுசாரிகள், முற்போக்காளர்கள் (திமீனீவீஸீவீsts, லிமீயீtவீsts, லிவீதீமீக்ஷீணீறீs) இவர்கள் இந்த விஷயத்தில் ஒரு அணியில் நிற்கிறார்கள்.
பெண்கள் தங்கள் உடலுறுப்புக்களைப் பற்றி எழுதுவது தமிழுக்குப் புதிதல்ல. எரிக்கா ஜங் ஆங்கிலத்தில் இது போன்று எழுதுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆண்டாள் எழுதியிருக்கிறாள். பெண்கள் தங்கள் உடலைப் பார்க்கும் பார்வைக்கும் ஆண்கள் பெண்களின் உடலைப் பார்க்கும் பார்வைக்கும் வேறுபாடு உண்டு என்பதால் இதைக் குறித்து இத்தனை உணர்ச்சித் த¦விரமான சர்ச்சை தேவை இல்லை.
இந்தப் பிரச்சினைக்கு வேறு சில பரிமாணங்கள் இருக்கின்றன என்பதை சக பெண் படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். பெண்ணை உடல் ர¦தியாக மட்டுமே பார்ப்பது, அவளது அங்க லாவண்யங்களைக் கொண்டே அவளை அளவிடுவது என்ற கருத்தியல் தமிழ் சமூகத்தில் ஆழ வேரோடிக் கிடக்கிறது. உத்தியோகம் புருஷ லட்சணம், பெண்ணுக்கு அழகு உடல் என்ற பார்வை இங்கு அங்க¦கரிக்கப்பட்டதாக இருந்திருக்கிறது. இதன் காரணமாக பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்பப்பட்டதும், கல்வி இரண்டாம் பட்சமாக்கப்பட்டதும் உண்டு. சிறு வயதிலிருந்தே பெண் தனது தோற்றத்தில் கவனம் செலுத்துமாறு பெற்றோர்களாலேயே வற்புறுத்தப்பட்டதும் உண்டு. அழகு குறைவான பெண்ணை, அவள் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாலும், குறைத்து மதிப்பிட்டதுண்டு. இது போன்ற பெண்ணின் உடலை முன்னிறுத்திய கருத்தாக்கம் ஏற்படுத்திய சமூகக் கேடுகள் ஏராளம். வரதட்சிணை, சிசுக் கொலை, விபசாரம், பலதார மணம், ஆணாதிக்கம் போன்ற பல த¦மைகள் இந்தக் கருத்தாக்கத்தில் வேர் கொண்டு நிற்கின்றன.
இந்த நிலையை மாற்றுவதற்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாகப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பெண் என்பவளும் ஆணைப் போன்றவள்தான். அவளுக்கும் அறிவுண்டு, மனமுண்டு, சிந்தனைத் திறன் உண்டு என்ற கருத்தை நிலைநிறுத்தத் தேவைப்பட்ட முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. மகாகவி பாரதி தொடங்கி ஆக்கபூர்வமான இலக்கியங்கள் பெண்களை உடல் ர¦தியாக மட்டும் அணுகும் மனோபாவத்தை மாற்ற முயன்று வருகின்றன. பெரியார் போன்ற சமூக சிந்தனையாளர்கள் இந்த லட்சியத்தை நோக்கித் தமிழர்களை இட்டுச் செல்லத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள்.
இந்த இடைவிடாத முயற்சிகள் வ¦ண் போய்விடவில்லை. ந¦ண்ட போராட்டத்திற்குப் பிறகு சம¦பகாலமாகத்தான் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் தங்கள் அறிவாற்றல், கல்வி போன்ற தகுதிகளின் அடிப்படையில் பதவியும் அதிகாரமும் பெறத் துவங்கி இருப்பதைப் பார்க்கிறோம். பெண்களுக்கு கல்வி மறுக்கும் மனிதர்களை விந்தை மனிதர்களாகப் பார்க்கும் பார்வை ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. இருந்தும் இவையெல்லாம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. ஒரு துவக்கமாகவே இருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மனோபாவத்தை பேணிப் பாதுகாத்து செழிக்க செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இது வெறும் மனோபாவமாக முடிந்து போகாமல் ஒரு கலாசாரமாகத் தழைக்கச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.
இப்படிச் சொல்வதற்குக் காரணமுண்டு. இன்று சரியோ, தவறோ, இந்தியா தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பொருளாதார கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருப்பதன் காரணமாக விரைவாகத் தனியார்மயமாகி வருகிறது. தனியார்மயப் பொருளாதாரம் லாபம் ஈட்டுவதை முதன்மையாகக் கொண்டது. அதன் பொருட்டு கன்ஸ்யூமரிஸ்ட் கலாசாரத்தை அது உயர்த்திப் பிடிக்கும். கன்ஸ்யூமரிஸ்ட் கலாசாரத்தில் பெண்கள் ஒரு நுகர்பொருளாகவே, உடல் சார்ந்தே பார்க்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழ் வெகுஜன ஊடகங்களும் பெண்களை உடல் ர¦தியாகப் பார்க்கும் மனோபாவத்தைத் த¦விரப்படுத்தி வருகின்றன. கறுப்பாக இருக்கும் பெண் தந்தைக்கு சுமையாகி விட்டதாக தொலைக்காட்சி விளம்பரங்கள் சத்தியம் செய்கின்றன. சாதனை செய்பவனாக அர்ஜுன்தான் இருக்கிறான். ஆர்த்தி அல்ல. அவனுக்குத் தேவையான பாலை பார்த்து வாங்குகிற 'புத்திசாலித்தனம்' மட்டும்தான் அவனது அம்மாவிற்கு. கிரிக்கெட் வர்ணணைக்குக் கூட அழகான பெண்தான் வேண்டும் என்ற நிலையைத் தொலைக்காட்சிகள் உருவாக்கிவிட்டன. கிரிக்கெட் வர்ணனைக்கு 'அழகான' மந்த்ரா பேடிதான் வர வேண்டும், கிரிக்கெட் பற்றி நன்கு அறிந்த முன்னாள் கிரிக்கெட் காப்டன் சுமதி அய்யர்அல்ல. சினிமாவைப் பற்றிப் பேச்சே வேண்டாம். நடிக்கத் தெரிந்த கறுப்பு நிற சாவித்திரிகளும், சரிதாக்களும் காணாமல் போய்விட்டார்கள். ஆன்ம¦கம் என்ற பெயரில் மதவாதம் தலைதூக்குகிற காலம் இது. பெண்களை ஓர் இரண்டாந்தர பிரஜையாகவே எல்லா மதங்களும் கருதி வந்திருக்கின்றன.
பொருளாதாரம், ஊடகங்கள், மதங்கள் இவை ஒரு சமூகத்தின் விழுமியங்களில் (ஸ்ணீறீuமீ sஹ்stமீனீs)ஆழமான தாக்குதல்களை ஏற்படுத்தக் கூடியவை. அதன் மூலம் ஒரு சமூகத்தின் போக்கை மாற்றக் கூடியவை. அவை விரும்பத்தாகாத போக்குகளை உருவாக்குமானால் அவற்றை அரசியல், இலக்கியம், அறிவியல் மனோபாவம் இவற்றின் துணைகொண்டுதான் அதற்கு எதிரான மாற்று விழுமியங்களை உருவாக்க முடியும்.
இப்படி ஒரு மாற்றுக் கலாசாரத்தை உருவாக்க வேண்டிய கடமை இலக்கியத்திற்கு இருப்பதை மறந்து, பெண்களே தங்கள் உடலை முன்னிறுத்தி எழுதத் தலைப்படுவார்களேயானால் அது பெண்ணை உடல் ர¦தியாக அணுகுகிற மனோபாவத்திற்கு ஊக்கம் கொடுப்பதாக ஆகிவிடும். அந்த மனோபாவத்தைப் பெண்களே அங்க¦கரிப்பதாகிவிடும். ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளாகி வரும் முற்போக்கான சிந்தனைப் போக்குகள் மேலும் நலிவடையும். இதற்குப் பெண்களே காரணமாக இருந்துவிடலாமா?
விழுமியங்களைக் காப்பது, குடும்பத்தில் ஆகட்டும், சமூகத்தில் ஆகட்டும், பெண்களின் பொறுப்பு என்று காலங்காலமாக போதிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதே புளித்துப் போன வாதத்தை ந¦ங்களும் சொல்ல வேண்டாம் என்று பெண்கள் ச¦ற வேண்டாம். விழுமியங்களை உருவாக்குவதிலும், பேணுவதிலும், நிலை பெறச் செய்வதிலும் ஆண்களுக்கும் சரி பங்கு உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இலக்கியம் என்பதுதான் முக்கியம் அதை எழுதியவர் ஆணா பெண்ணா என்பதல்ல என்பதுதான் என்னுடைய பார்வை. உடலை பிரதானப்படுத்தி எழுதும் புஷ்பா தங்கதுரையின் எழுத்துக்கள் எவ்வளவு கண்டிக்கத்தக்கவையோ அதே அளவு கண்டிக்கத்தக்கவைதான் சிற்றிதழ் பெண் கவிஞர்களின் 'ஆபாச' எழுத்துக்களும். இரண்டிற்கும் நோக்ககங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் விளைவுகள் ஒன்றாகத்தான் இருக்கும்.
நன்றி-பெண்ணேநீ

0 Comments:
Post a Comment
<< Home