- வெங்கட் சாமிநாதன்
சமீபத்தில் "அணங்கு' என்னும் ஒரு பெண்ணிய இலக்கிய அமைப்பு நடத்திய கருத்தரங்கம் சென்றிருந்தேன். கொஞ்சம் சிரமத்துடன்தான் சென்றேன். எளிதாக அடைய முடியாத ஓர் இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். குற்றம் சொல்வதற்கில்லை. கிடைத்த இடத்தில்தான் ஏற்பாடு செய்ய முடியும்.
பெண்ணியம், கட்டாயம் வரலாற்று நியாயங்களையும் சமூக நியாயங்களையும் தன்னுள் கொண்டுள்ளதுதான். சமூகம், ஆண் மேலாதிக்கம் கொண்ட சமுகம்தான். இப்பெண்ணிய விழிப்புணர்வும், எதிர்ப்பும் எழுவது இயல்புதான். இவ்வெதிர்ப்புணர்வின் வெளிப்பாடுகள் சில, ஆரம்ப உற்சாக மிகுதியினாலும் உணர்ச்சி மேலீட்டினாலும் திடுக்கிட வைக்கும் அளவுக்கு நிதானமிழந்து எல்லைகளை மீறுவதாகத் தோன்றும். 'உள்ளாடைகளை எரிப்போம்' என்ற கோஷம் பெண்ணிய வீராப்பின் அடையாள மாயிற்று ஒரு கட்டத்தில், பல இடங்களில். தன் இயல்பான பெண்மையே, ஆண் மேலாதிக்கம் கட்டமைத்துள்ள சதிகாரச் சட்டத்தின் விளைவு என்று சொன்னால் அதை என்னவென்று சொல்வது? பூக்கள் அழகாகவும் மிருதுவாகவும் வண்ணக் கவர்ச்சியோடும் இருப்பது என்ன சதித்திட்டத்தின் விளைவு? இப்படியான கோணலான விகார வாதங்கள் வைக்கப்பட்டன. பெண் தன் பெண்மையைக் குற்ற உணர்வோடு பார்த்தால், ஆண், ஒரு சமாதானத் தீர்வாக தன் ஆண்மையை இழந்துவிடத் தீர்மானித்தால், அதைத் தடம் மாறிவிட்ட இயக்கம் என்றுதான் சொல்லவேண்டும். அலைமோதýல், உயர எழும் அலை அடங்கி சம நிலை அடைய வேண்டும். எந்தக் கூட்டு இயக்கத்திலும் அவரவரது மன விகாரங்கள், இயக்கத்தின் லேபிளைத் தன் மீது ஒட்டிக்கொண்டு தன் விகாரத்திற்கு நியாயம் தேடிக்கொள்ளும். கூட்டத்தின் எல்லை மீறல், எப்போதும் பாஸிஸ குணங்களை மேற்கொள்ளும்.
அம்மையார் ஒருவரின் மன விகாரம், எல்லை மீறிய போது, அந்த அம்மையார் புலம்பிக் கொண்டிருந்தாராம். "எந்தப் பெண்ணிய எழுத்தாளர் எனக்கு உதவியாகக் குரல் கொடுத்தார்? நான் தனித்து விடப்பட்டேன்?' என்று. ஒரு தனிப்பட்ட அம்மையாரின் மன விகாரம் எப்படி பெண்ணியப் பொதுக்குரலாகும்? அடுத்து இன்னும் ஒரு பெண் கவிஞரின் கவிதைகள் கடுமையாக, என் கருத்தில், நியாயமற்று விமர்சிக்கப்பட்ட போது அந்தப் பெண்கவிஞருக்குத் தன் கவிதைகளில் இருந்த நம்பிக்கையை விட தன் பெண்ணிய கட்சி லேபிளிலும், தன் கோபக் கனýலும், வசைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டவராகக் காணப்பட்டார். விமர்சகர், பாவம், ஆடிப்போய்விட்டார். பெண் பாவம் பொல்லாது என்ற சமூகப் பார்வை உண்டே! பெண்ணியம் என்ன கருத்துக்கொண்டி ருந்தாலும் இது சாதகமான சமூகப் பார்வை ஆயிற்றே. ஆனாலும், ஒரு கொடூரமான ஆணாதிக்க அராஜக சிந்தனை இங்கு அரசியýலும் எழுத்தாளர் சமூகத்திலும் நிலவுகிறது. யங்ள்ற்ங்க் ண்ய்ற்ங்ழ்ங்ள்ற்ள் என்பார்கள். தன் பதவி, தன் புகழ், தன் நலன், தன் உரிமை எனத் தான் கற்பித்துக்கொண்டுள்ளது ஆபத்தில் உள்ளது என்றாலோ, அவற்றை இழக்கும் விளிம்பிற்குத் துரத்தப்பட்டாலோ, ஆணாதிக்க மனம் ஒரு மிருகத்தனமான கோரத்தை ஸ்வீகரித்துக்கொள்கிறது.
பெண் கவிஞர்கள் சிலர், இன்றைய சமூக மதிப்புகளின் மொழி வெளிப்பாட்டு எல்லைகளை மீறத் தொடங்கியுள்ளார்கள். அது சரியா, தவறா என்பது கருத்துப் பரிமாற்றத்திற்குத் தளம் அமைத்து விவாதிக்கப்பட வேண்டியது. அதை விட்டு, 'இவர்கள் என் எதிரில் வரட்டும். காலை வெட்டு கிறேன்; கையை வெட்டுகிறேன்' என்று சொல்வதற்கோ, "இவர்களை எல்லாம் மௌண்ட் ரோடில் வைத்துக் கொளுத்த வேண்டும்' என்று சீறுவதற்கோ கவிதையே எழுதாது கவிப்பேரரசு களாக ஆனவர்களுக்கோ, ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கலாமா, தாýகட்டி பிள்ளை பெற்றுக் கொள்ளலாமா என்று வீட்டுக்கு வீடு சந்துபொந்துகள் எல்லாம் சிறுவர்கள் தெரிந்தோ தெரியாமலோ குதூகýத்துக் கொம்மாளமிடக் காரணமாக இருந்தவர்களுக்கோ இத்தகைய பாஸிஸக் குரல் எழுப்ப அருகதை இல்லை. பெண் கவிஞர்களாவது, தன் வாழ்நிலையின் வதைபடýல் உணர்ச்சி கொப்பளிக்க, நிதானமிழந்தவர்கள் என்றுதான் அதிகம் குற்றம் சாட்டலாம். ஆனால் வெட்டவும் எரிக்கவும் கிளம்புகிறவர்கள் குரல், கவிஞர் குரல் அல்ல. அவர்கள் பணத்தாசையில், பேர் ஆசையில் கட்டளைக்குப் பாட்டெழுதிய அவலம் அடைந்தவர்கள். அடைந்தவர்கள் அல்ல, ஆசையுடன் அவல நிலையில் வீழ்ந்து, அச்சகதியில் புரளும் சந்தோஷம் கொள்பவர்கள்.
பெண் கவிஞர்களின் மொழி எல்லை, சமூக மதிப்பு மீறல்களைக் குறைசொல்ல, தண்டனை கொடுக்க இவர்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
தகுதி இருப்பதாக இவர்கள் எண்ணிக் கொண்டால் இவர்கள் தம் பலவீனத்தைத்தான் தம்பட்டமடித்துக்கொள்கிறார்கள். அத்தோடு தம் மிருகத்தன வெளிப் பாட்டையும்தான் காட்டிக் கொள்கிறார்கள்.
ஆக, நான் அணங்கு கருத்தரங்கு சென்றது, பெண் கவிஞர்கள் பலரும் பெண்ணியவாதிகளும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வந்த எழுத்தாள பிரமுகர்களும், இம் மொழி வெளிப்பாடு பற்றி என்ன நியாயங்கள் சொல்கிறார்கள்? அவர்கள் கருத்துநிலை என்ன என்று அறியத்தான். சற்று தாமதமாகச் சென்றேன். இடம் கண்டுபிடிக்கும் தடுமாற்றத்தில் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் தான் நான் சென்னையைப் பரிச்சயப்படுத்திக் கொள்கிறேன்.
கருத்தரங்கில் நிறைந்திருந்தது, ஆண்கள் கூட்டம். நான் கேட்கப் பேசியவர்கள் எல்லோரும் ஆண்கள். ஆணாதிக்கத்தின் கொடூரங்கள் பற்றி விளாசித் தள்ளினார்கள். இவ்வாறு பெண்களின் பரிதவிப்பிற்ச்ôகக் கண்ணீர் விட்டவர்களில் சிலர், அவரவர் வீட்டில் கோலோச்சும் பெண்ணரசிகளின் கட்டுப்பாட்டில் அடங்கி ஒடுங்கி வாய்பொத்தி இருப்பவர்கள். ஆக இதுவும் ஒரு பொய்யான அரசியல் கோஷ மேடையாக்கப்பட்டுவிட்டது என்றுதான் தோன்றிற்று. ஏழைகளுக்காகக் கண்ணீர் விடும், ஆயிரங்கோடி சொத்துள்ள தலைவர்களை நாம் தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் காண்பதில்லையா? அதே சமயம் தன் முரட்டுக் கணவனின் காட்டுக் கத்தலைக் கண்டு பயந்து வாயடைத்துப் போகும் பெண்ணியவாதிகளையும் கண்டிருக்கிறேன். புடவைக் கடைக்குப் போகக் கூட கணவனின் அனுமதி பெற்றே போவார்கள். இவ்வள வுக்கும், கணவனை விட திறமையும் புத்திக் கூர்மையும் மிகுந்தவர், பெண்ணியவாதி. ஒரு சமயம், 'செருப்புப் பிஞ்சிடும், ஆமாம் தெரியுமா?' என்ற கூச்சல் கேட்டு (அந்நிய மொழியினர் கூடியிருந்த கூட்டத்தில்) திரும்பிப் பார்த்தால் அந்தக் கணவர் கண்சிவக்க, பெண்ணியவாதி அடங்கி மௌனம் காத்தார்.
""நான் பெண்ணியவாதி அல்ல'' என்று தனக்கே ஆன தீர்மானத்துடன் பலமுறை சொல்ýயிருக்கிறார், தன் பேட்டிகளில் அவருடைய ""மந்திரி சபையில் உள்ள ஒரே ஆண்'' என்னும் பெயர் பெற்றவர் இந்திரா காந்தி. பெண்ணியம் எனப் பேசாது தன் ஆளுமையின் வீரத்தையும் பலத்தையும் நிரூபித்தவர். எனக்கு ஒரு நிகழ்ச்சி சொல்லப்பட்டது, பத்திரிகை நிருபர்களால். விமான விபத்தில் சஞ்சய் காந்தி உயிரிழந்த போது, துக்கம் விசாரிக்கச் சென்றவர்களில் தமிழக அரசியல் தலைவரும் ஒருவர். இந்திரா காந்திமுன் தொண்டை அடைக்க, குரல் விக்கித்துப்போக, அழுகை தொனிக்க, ஏதோ சொல்ல, இந்திரா காந்தி "ரட்ஹற்'ள் ற்ட்ண்ள்? ஸ்ரீர்ய்ற்ழ்ர்ப் ஹ்ர்ன்ழ்ள்ங்ப்ச் " என்று கடிந்து கொண்டாராம். இந்த இடத்தில் இந்த சமாச்சாரம் பýக்காது என்று அந்த அரசியல் தலைவர் தெரிந்து அமைதியானாராம். இவர் கண்ணீர் புகழ் பெற்றவர். அலங்கார நடையில் இரங்கல் செய்தி தருபவர்.
ஆக, ஆண்மை, பெண்மை என ஏதும்- வரம்புகளை குணங்களுக்கு, நம் வெளிப்பாடுகளுக்கு செயல்களுக்குக் கட்டிவிடமுடியாது. வீரத்துடன் மனதிடத்துடன் அஞ்சாமையுடன், பெண்மையும் உடன் வாழ முடியும். வீராவேசப் பேச்சுகளுமாக கண்ணீருமாக, ஆண்மையும் பவனிவரும்.
ஆபாசம், எல்லை மீறல், என்ப தெல்லாம் கூட இப்படி வரம்புகளுக்குட் படாதவைதான். காலம், சமூக மதிப்புகள் என வரம்புகள் உள்ளன.
வெள்ளிவீதியார், ஒளவையார் என இரண்டு பேரிடம் பேச்சாளர்கள் அடிக்கடி தஞ்சம் அடைந்தனர். இதில் எல்லாம் ஏதும் அர்த்தம் இல்லை. இன்று 2004 இல் எந்த 13 வயதுச் சிறுமியாவது ஆண்டாளைப் போல் கவிதை எழுதினால், எந்தத் தமிழ்த் தந்தை, பெரியாழ்வாராக ஆகி, ஆசீர்வதித்து மகிழ்வார் எனத் தெரியாது. அவ்வளவு தூரம் போகவேண்டாம். 16 ஆம் நூற்றாண்டு கிருஷ்ண தேவராயர், தன் இரண்டு ராணிகளுடன் தான் கட்டிய கோவிýல், தெய்வத்தை வணங்கி நிற்கும் சிற்பம் உண்டு. ஒரு சாம்ராஜியத்தின் சக்கரவர்த்தி இடுப்பில், முழங்காலுக்கு மேல் தொங்கும் ஆடையுடன் கைகூப்பி நிற்கிறார். இரண்டு ராணிகளுக்கும் அதே கதைதான். திரண்டு பொங்கி எழும் மார்புகள். சக்கரவர்த்திக்கோ, அவரது ராணிகளுக்கோ, ஏதும் மறுப்பு இருக்க வில்லை. அரசவையின் மற்றோருக்கும் மக்களுக்கும் ஏதும் மறுப்பு இருக்க வில்லை. இது சகஜமாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. சங்க காலத்திýருந்து, சுமார் ஆயிரம் ஆண்டுகாலம் இத்தகைய சுதந்திரமான வெளிப்பாட்டிற்குத் தடை ஏதும் இருந்ததில்லை. ஒரு சினிமா நடிகைக்குக் கோயில் எழுப்பியதாகப் படித்தேன். அதில் அந்த நடிகை எத்தகைய தோற்றம் தந்திருப்பார்? ஆண்டாள் மாதிரி அவர் பேசவும் மாட்டார். அவரது சிலை, கிருஷ்ண தேவராயரின் பட்ட மகிஷி போன்ற தோற்றமும் கொண்டிருந்திராது.
பழைய விவகாரம் போகட்டும். அறுபதுகளில் ஓர் சமயம், ஹிந்தியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான கிருஷ்ணா úஸôப்தி, ஒரு சர்ச்சைக்குரிய கதையை (யாரோ(ன்)கே யார்) எழுதியிருந்தார். அதில் ஆபாசம் என்று கருதப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் நிறைய இருந்தன. பிராபல்யம் பெறும் ஆசையில் எழுதப்பட்டதல்ல என்பதும், கிருஷ்ணா úஸôப்தி, தரமான எழுத்தாளர் என்பதும் சர்ச்சைக்கே இடமில்லாது ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்கள். தமிழ் எழுத்தாளர் மாதிரி அவ்வளவு மோசமில்லை. கிருஷ்ணா úஸôப்தியை தம்மிடையே வைத்துக் கொண்டே அவர் முன்னிலையிலேயே ஒரு கருத்தரங்கம் நடந்தது. இரு தரப்பிலும் வாதங்கள் நடந்தன. பண்பாடற்றவை என்றும், சகஜமாக மக்களிடையே படித்தவர்களிடையே கூட புழங்கும் வார்த்தைகள்தான் என்றும் வாதமிடப்பட்டாலும் ஒரு வேடிக்கையான விஷயம், அவர்களில் யாரும், எழுத்தாளர் கிருஷ்ணா úஸôப்தியையும் சேர்த்து ''அந்த மாதிரியான வார்த்தைகள்'' என்றுதான் குறிப்பிட்டார்களே அல்லாது ''அந்த மாதிரி வார்த்தைகள்'' என்ன என்பதை யாரும் உச்சரிக்க வில்லை. உச்சரிப்பது அவர்களுக்கே அவ்வார்த்தைகளை எழுதிய கிருஷ்ணா úஸôப்திக்கே கூட நாகரிக மற்றதாக-பண்பாடற்றதாகத்தான் பட்டிருக்கிறது.
இங்கே கூட சம்பந்தப்பட்ட கவிஞர்கள் யோனி என்ற, புழக்கத்தில் இல்லாத, தமிழ் அல்லாத வார்த்தையைத்தான் வýந்து எழுதியிருக்கிறார்களே தவிர அதற்கான தமிழ் வார்த்தையை, ஒரு தரப்பட்ட சமூகத்தில் மாத்திரமே புழக்கத்தில் உள்ள வசையான, ஆனால், எல்லாத் தமிழரும் அறிந்த வார்த்தையைப் பயன்ப டுத்தவில்லை. தெரிந்தே பலத்த யோசனையின் பிறகே என்பதில் எனக்குச் சந்தேக மில்லை. தம் வாழ்நாளில் ஒரு முறை கூட அந்தக் கவிஞர்கள் அத்தமிழ் வார்த்தையை உச்சரித்திருக்க மாட்டார்கள் என்பது எனது சர்வ நிச்சய மான யூகம். அவர்கள் இக்கூற்றை மறுத்தால் நான் ஏதும் சொல்வதற்கு இல்லை.
ஆக, படிப்போரை, ஆண்களை, சமூகத்தை இவ்வாறு எழுதித் திடுக்கிட்டு ஆடவைத்து விடவேண்டும் என்று நினைத்துச் செய்த காரியத்தில் அவ்வாறு திடுக்கிட வைக்கும் வார்த்தையைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கே தயக்கம் நிறைய இருந்திருக்கிறது. திடுக்கிட வைப்பது சொல்லப்பட்ட கருத்துதானே. இதுகாறும் திடுக்கிட வைத்த கருத்துகளைச் சொல்ý ஸ்தம்பிக்க வைத்த இக்கவிதாயினிகள், அந்த வார்த்தைகள் இல்லாமலேயே சொல்ý விட முடிகிறபோது, இப்போது ஏன் அந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தியே ஆக வேண்டும் என்று வீம்பு பிடித்து, பின் தயங்கித் தடுமாறி, யோசித்து, யாரும் புழங்காத சம்ஸ்கிருத வார்த்தையில் தஞ்சம் புகுந்து ஏதோ கத்தி சுழற்றி விட்டதாகப் பூரித்துப் போகவேண்டும்?
ஸ்ருதி என்னும் பத்திரிகையில் அநேகம் வருடங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சி. அரியக்குடி ராமானுஜ அய்யங்காருடன் பேட்டியோ அல்லது, அவருடனான சம்பாஷணையை நினைவுறுத்தியோ எழுதப்பட்டிருந்தது. ஆண்டாளின் திருப்பாவையை ஸ்வரப்படுத்த எடுத்துக்கொண்டவர், பல பாடல் களைத் தொடவில்லையாம் 'அதெல்லாம் வேண்டாம்னா? என்னென்னெல்லாமோ எழுதியிருக்கு. கஷ்டமா இருக்கு' என்றார், அரியக்குடி. ஆண்டாளுக்கும் பெரியாழ்வாருக்கும் இல்லாத தயக்கம், அவருக்கு. இடையில் 13 நூற்றாண்டு காலம் கழிந்துள்ளதே. அப்போது அவரிடம் ஒரு கேள்வி: "ஜெயதேவரின் அஷ்டபதிக்கு செய்திருக்கிறீரே ஸ்வாமீ' அதிலேயும்கூட அப்படி என்னென்னவெல்லாமோ எழுதியிருக்குமே?' என்று. அது சரி. ஆனா அதெல்லாம் ஸமஸ்கிருதத்திலேன்னா இருக்கு. ரொம்பப் பேருக்கு அது என்னன்னே புரியாது இல்லையா? அதனால் பாதகமில்லை. திருப்பாவை தமிழ்லேன்னா, இருக்கு?' என்றாராம், அரியக்குடி.
அரியக்குடி மாதிரி ஒரு பழங்கால ஆசாரசீலருக்கு இருந்த பண்பாட்டுத் தயக்கங்கள், நமது இன்றைய பெண்ணிய வீராங்கனைகளான கவிதாயினிகளுக்கும் இருந்துள்ளது விநோதம் தானே! அவர் புரட்சி செய்யத் தயங்கியவர். இவர்கள் புரட்சி பண்ணப் புறப்பட்டவர்கள். இருவருக்கும் ஒரே மாதிரி சிந்தனை! செயல்பாடு!!
ஆக, நான் எந்த விளக்கங்கள் கிடைக்கும் என்ற ஆர்வத் தோடு சென்றேனோ, அந்த விளக்கங்களுக்குக் கருத்தரங்கில் இடமிருக்கவில்லை.
ஆனால் ஒரு நாவன்மையும் தங்கு தடையற்ற சொல் பிரவாகமும், மூச்சிரைக் காத ஆரோக்கியமும் கொண்ட அஜிதா என்ற பேச்சாளர், தம் அரசியல் களப்பங்கை ஆற்றி னார். பெண்களின் வதைபடும் வாழ்க்கையைவிட அவர் பேச்சில் முக்கிய இடம் பெற்றது பார்ப் பனியரும் மனுஸ்மிருதியும். வரலாற்றுத் தொகுப்பாக ஆதி காலத்தைத் தொட்ட அவர், இஸ்லாம், கிறித்துவம், பார்ப்பனியம், மனுஸ்மிருதி என்று ஆரம்பித்து அடுத்த நிமிடம், அடுத்த வாக்கியத்தில் இஸ்லாத்தையும் கிறித்துவத்தையும் அங்கேயே விட்டு விட்டு பின்னிரண்டையும் கடைசிவரை அவர் சாடிய சாடல், திராவிட இயக்கங்கள் அத்தனைக்கும் மகிழ்ச்சி தரும். மிக வன்மையான அயராத பேச்சாளர், எதைத் தாக்கவேண்டும் என்று தீர்மானித்துக்கொள்கிறாரோ அதற்கேற்றவாறே, தன் வாதங்களைச் சýத்தெடுத்துக்கொள்வார். வக்கீல். நிறைய வாதத்திறமை. தனக்குச் சாதகமான டர்ண்ய்ற்ள் - ஐ மாத்திரம் பொறுக்கி எடுத்து அதை ஊதிப் பெருக்கி பூதாகாரமாகச் சித்திரிப்பதில் வல்லவர்.
மனுஸ்மிருதி கல்வெட்டாகிப் போன, பழஞ் சுவடியாகிப் போன ஆவணம். யாரும், ஈயத்தைக் காய்ச்சிக் கொட்டுவது கிடையாது தண்டனையாக. மலம் கரைத்து ஒரு தýத் வாயில் ஊற்றியதாக பத்திரிகைச் செய்தி உண்டு. எந்தப் பார்ப்பனர் இதைச் செய்தது? இல்லையெனில் செய்தது யார் என்று அஜிதா விசாரித்துச் சொன்னால் நலமாக இருக்கும். ஆனால், கடவுள் கட்டளை, என்று முல்லாக்கள் சொல்ý தம் விருப்பத்திற்கும் ஆண் மேலாதிக்கத்தின் அடக்குமுறைக்கு மான கருவியாகப் பயன்படுத்தும் ஷரியத் இன்னும் உயிருள்ள -உயிரூட்டப்படும் சட்ட விதி. திருடினவன் கை வெட்டப்படும். கற்பழிக்கப்பட்டவள், வழி தவறியவள் நடுத்தெருவில் நிற்க வைக்கப்பட்டு ஊர்க்காரர்கள் வேடிக்கை பார்க்கக் கற்கள் எறிந்து கொல்லப்படுவாள். கற்பழிக்கப்பட்ட பெண், தான் குற்றமற்றவள் என்று நிரூபிக்க நான்கு சாட்சிகள் தேவை, ஆண்களுக்கு அது தேவை இல்லை. மூன்று முறை 'தலாக் தலாக்' என்று சொன்னாலே போதும். ûஸயத் ஹாபுதீன் பயமுறுத்தினால், ராஜீவ் காந்தி அரசியல் சட்டத்தையே திருத்தி உதவுவார். அஜிதா வேண்டி னால் நைஜீரியாவிýருந்து பாகிஸ்தான் வரை முஸ்ýம் அரசு நாடுகளின் நடப்புச் செய்திகளை நான் தரமுடியும். அஜிதா பத்திரிகை படிப்பவரென்றால், சுற்றி நடப்பவற்றைக் கவனிப்பவரென் றால் தமிழ்நாட்டில் அரசோச்சுவது பார்ப்பனீயம் அல்ல. அவர்கள் அல்லாத-மேல் ஜாதிக்காரர்களும் அல்லாத, இடைநிலைப்பட்ட சாதியினரிýருந்து கடைநிலையில் உள்ளவர் வரை உள்ள நூற்றுக் கணக்கான சாதியினர் அத்தனை பேரும் இன்றுவரையும் இனி என்றும் தவறாது கடைப்பிடிக்கும் அந்தந்தச் சாதீயம் தான், அதன் வன்முறைதான், அந்தந்தச் சாதீய ஆண்களாலும், அவர்களுக்கு மேல்படியிýருக்கும் சாதியின் ஆண்களாலும் வதைபடும் பெண்களிடம் கேளுங்கள். அவர்கள் கொடுமைக்காளாவது எந்தச் சாதீயம், எந்த ஆணாதிக்க மேலாண்மை என்று. இன்று வரை கடந்த 20 ஆண்டுகளாகப் பெருகிவரும் தýத் எழுத்துகள் (படைப்பிலக்கியங்களைச் சொல் கிறேன். தýத் சித்தாந்திகளின் கொள்கைப் பிரகடனங்களைச் சொல்ல வில்லை.) என்ன சாட்சியம் கூறு கின்றன, தெரியுமா? அவை உண்மை யின் பதிவுகள். இதய வýயின் உடல் வýயின் பதிவுகள். திராவிட இயக்க எழுத்துகள் போல கதை சொல்ல வந்த கொள்கைப் பிரகடனங்கள் அல்ல. கடைசியாக ஒன்று சொல்லத் தோன்றுகிறது. சிறு வயதிýருந்து அரசியல் கட்சிக் கூட்டங்களை நான் பார்த்துக் கேட்டு வருகிறேன். திராவிட இயக்கப் பேச்சாளர்கள் (இதில் தலைவர், தொண்டர் வித்தியாசங்கள் கிடையாது) பெண்களை ஆபாசமாகக் கிண்டலாக, பாýயல் உபமானங்களோடு ஆபாச அங்க வர்ணனைகளோடு, கூட்டத்தினரைக் களிப்பூட்ட தம் பேச்சுக்களில் மசாலாவாக தம் ஆபாச வர்ணனைகளைப் பரவலாகத் தெளித்து திராவிட இயக்கப் பேச்சுகளை 'அ' முத்திரை குத்தப்பட்ட சினிமாவாக ஆக்கியது யார்? இது தொடக்கம். இது திராவிட இயக்கப் பேச்சாளர்களின் கைங்கர்யம் . இன்று இது எல்லாக் கட்சிகளையும் பிடித்துள்ள நோய். தமிழ்நாட்டின் பண்பாட்டுச் சீரழிவிற்கு யார் முழுமுதற்காரணம் என்று நினைக்கிறீர்கள்? தனக்கு எதிர்க்கட்சியில் உள்ள பெண்களை எவ்வளவு கேவலமாக ஆபாசமாக வர்ணிப்பார்கள் தெரியுமா? இதற்குத் திராவிட இயக்கத் தலைமைகள்தான் வழிகாட்டி. அன்று காங்கிரஸில் இருந்த அனந்தநாயகி, இவர்களது ஆபாக மேடைப் பேச்சுகளால் எவ்வளவு கேவலப்படுத்தப் பட்டார்! இன்று இவர்கள் ஆபாச வர்ணனைக்கு ஆளாவது, ஜெயலýதா. பெண்கள் எதிரணியினர் என்றாலே இவர்களுக்கு உற்சாகம் அலைமோதும். விழுப்புரம் மாநாடு பற்றிக் கேட்டதுண்டா, அஜிதா அவர்களே! அல்லது இப்போது நடக்கும் தேர்தல் கூட்டங்களை? இளங்கோவன் பேச்சுகளைத்தான் கேளுங் களேன். அவரும் சளைத்தவரில்லை.
பெண்ணியம் இதற்கு என்ன சொல்கிறது? இல்லாத இடத்தில் இருட்டில் தேடிக்கொண்டே இருக்கலாம். 70 வருடங்களாகப் பேசியாயிற்று. இன்னமும் பேசிக்கொண்டே இருக்கலாம். எதிரணியில் பெண்கள் இல்லாமலா போய் விடுவார்கள்.
சமூகமே ஆபாசமாக நிறைந்திருக்கிறது. பெண்களை இரையாக்கிக் களிப்பதில் என்ன உற்சாகம் இந்த சக்திகளுக்கு! செய்வதையெல்லாம் செய்து விட்டு வசனம் பேசலாம். ""மாற்றான் வீட்டுத் தோட்டத்து மல்ýகை'' என்றும் ""நாங்கள் கற்றது கடமை கண்ணியம் கட்டுப்பாடு'' என்றும்.
பெண்களை, தனக்குச் சமதையே இல்லாத, தன் திளைப்பிற்கும் சுகத்திற்குமேயான கருவிபோல, ஆபாசமாகப் பேசிக் களிப்பது, அரசியல் தலைமைகள் மட்டுமல்ல. வியாபாரமே குறியான சினிமாக்களும்தான். அதற்குக் கலை என்று பெயரும் கொடுத்து, பணத்தையும் பிராபல்யத்தையும் தந்துவிட்டால், இதற்குப் பெண்களும் தயார்தான். தானும் ஒரு ஸ்டார் ஆகி, தானும் அதிகாரம் செலுத்தும் நிலை வரை இப்பெண்கள் சினிமாவில், தானே வýந்தோ அல்லது நிர்பந்தத்திற்கு ஆட்பட்டோ, படும் அவல வாழ்க்கை சொல்லத் தரமன்று. இவர்களை ஆட்டுவிப்பவர்களிடம் இவ்வாட்டங்களைக் கண்டு களித்துக் கள்ளுண்ட மயக்கத்தில் மிதக்கும் சினிமா ரசிகர்களிடமும் காணப் படுவது ஆணாதிக் கத்தின் இரு பரிமாணங்கள் தாம்.
இவையெல்லாம் பற்றிய கவலை அணங்கு கருத்தரங்கில் காணப் படவில்லை.
கடைசியாக ஒன்றைப் பற்றிச் சுருக்க மாகவாவது சொல்லா விட்டால் நியாயம் செய்ததாகாது. அன்றைய இரு அமர்வுகளுக்கு இடையில் பிரீதம் சக்கரவர்த்தி, தனிநபராக நிகழ்த்திய கண்ணாடி நாடகம் இதுவும் "புகழ்பெற்ற' நவீன நாடகச் சமாச்சாரமோ என்று பயந்திருந்தேன். நல்ல வேளையாக இல்லை. தனியொரு நடிகராக சுமார் 45 நிமிடநேரம். அலட்டாமல், குரல் உயர்த்தாமல், பெண்கள் நிலையையும் ஒரு தலைமுறைக்கு இடையில் பெண்கள் பெற்றுள்ள விழிப்புணர்வையும் அமைதியாக, அதே சமயம் நிறைந்த அழுத்தத்துடன் வெளிப்படுத்தினார். யாருடைய கவனமும் வேறு எங்கும் அலைபாயவில்லை. வேண்டுவது ஒரு காý மேடை. ஒரு நடிகர். அங்கு நாடகம் பிறந்துவிடும் என்பதை அன்று பிரீதம் நிரூபித்தார். அவரதுதான் அன்று வெளிப்பட்ட பெண்ணியக் குரல். மற்றவையெல்லாம் விஷயத்தைத் தொடாத அவரவர்க்குப் பிடித்த கோஷங்கள். வாழ்த்தவேண்டும் என்று தோன்றிற்று. பிரீதமை வாழ்த்தினேன்.
http://tamil.sify.com/amudhasurabi/may04/fullstory.php?id=13469564