பெண்களின் புனிதம் உடைக்கப்பட வேண்டும்!
- மேகலா -
தமிழிலக்கிய உலகில் கருத்தரங்குகளுக்கு முக்கிய இடமொன்று உண்டு. தனிமனித விமர்சனம், அர்த்தமற்ற வாக்குவாதம், சுவாரஸ்யமற்ற ஆழமில்லாத பேச்சு.... இவற்றை தவிர்த்துப் பார்த்தால் நிறைய கருத்தரங்குகள், அர்த்தம் பொதிந்ததாக இருப்பது தெரியும். அப்படி ஒரு ஆரோக்யமான கருத்தரங்கை மாலதிமைத்ரியும், க்ருஷாங்கினியும் இணைந்து, "அணங்கு' இலக்கிய அமைப்பின் சார்பாக சமீபத்தில் சென்னையில் நடத்தினார்கள். "இலக்கிய மரபும் பெண்ணும்' என்ற அந்தக் கருத்தரங்கை இரண்டு அமர்வுகளாகப் பிரித்திருந்தார்கள்.
முதல் அமர்வுக்குத் தலைமை தாங்கினார் எழுத்தாளர் பிரபஞ்சன். "உலக பெண் படைப்பின் குரல்' என்ற தலைப்பில் பேச வந்த சா.தேவதாஸ், வர்ஜினியா வுல்ஃபின் கவிதையோடு ஆரம்பித்தார்.
""பெண் என்ற வகையில் எனக்குத் தேசமில்லை;
பெண் என்ற வகையில் எனக்குத் தேசம்
தேவையில்லை; பெண் என்ற வகையில்
இந்த உலகமே எனது தேசமாகும்.''
""பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த "அமாண்ட்ýன் அரோரி லூஸி டூபின்', "ஜார்ஜ் ஸôண்ட்' என்கிற ஆண் பெயரில்தான் எழுதினார். அவரது நாவல்கள் அமெரிக்காவில் விவ-காரம் மிக்கவையாக, அபாயகரமானவை-யாக, தேசத்துரோக-மானவையாகக் கருதப்பட்டன. அவரது சவ அடக்கத்தின்போது அஞ்சý உரை நிகழ்த்த வேண்டிய டூமாஸ் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஹ்யூகோ கலந்து கொள்ளாமல் சிறுகுறிப்பை மட்டும் அனுப்பியிருந்தார். அதேபோல் இங்கிலாந்தைச் சார்ந்த "இவான்ஸ் மரி-யேன்'கூட "ஜார்ஜ் எýயட்' என்ற ஆண் பெயரில்தான் எழுதினார்.'' சா.தேவதாஸ் உலக பெண் படைப்பாளிகளான சில்வியா பிளாத், ஆன்செக்ஸ்டன், விர்ஜினியா வுல்ஃப், ஜெர்மேன் கிரீர், ஈவ் என்ஸ்லெர், அட்ரியேன் ரிச்... ஆகியோரின் நிலைபற்றி அழகாகச் சொன்னார். அதில் ஆன் செக்ஸ்டனைப் பற்றி அவர் குறிப்பிட்டது நம்மை அதிர வைத்தது. ""செக்ஸ்டன் ஏழு கவிதைத் தொகுதிகள் எழுதியவர். பைத்தியமாகி தற்கொலை செய்து கொண்டார்.''
"இந்திய பெண் படைப்பில் அகத்தின் மொழி' என்ற தலைப்பில் பேசிய அரங்க மல்ýகா, அம்ருதா ப்ரீதம், மகாஸ்வேதாதேவி, மாதவிக்குட்டி, கமலாதாஸ்... என்று பல படைப்-பாளிகளை ஆய்வுக்குட்படுத்தி-யிருந்தார். ""கமலதாஸ் கவிதைகளை பெண்ணின் அக வெளியை உணர்ந்து கொள்ளும் ஒரு ஆவண-மாக எடுத்துக் கொள்ளலாம்'' என்றவர் தற்போதைய தமிழ்க் கவிஞர்கள் மாலதி மைத்ரி, க்ருஷாங்கினி, சுகிர்தராணி ஆகி-யோரைப் பற்றியும் குறிப்பிட்டார். ""சுருக்கமாக சொல்ல வேண்டு-மென்றால் இதுவரை இருந்த பெண்களின் புனிதம் உடைக்கப்பட வேண்டும். மெüனம் கலைக்கப்-பட வேண்டும். இதுதான் இன்றைய சூழýல் பெண்களின் அகம் சார்ந்த தேவை'' என்றார் அரங்கமல்ýகா.
பர்வீன் சுல்தானா, "தமிழ் சினிமா பெண்மீது நிகழ்த்தும் காட்சி மற்றும் கருத்தியல் வன்முறை' என்ற தலைப்பில் உரையாற்றினார். ""சமூகத்தைப் பொறுத்தவரை தமிழ்சினிமா தவிர்க்க முடியாத ஊடகம். தமிழ் சினிமா பல்வேறு தளங்களில் வன்முறையை நிகழ்த்துகிறது'' என்று ஆரம்பித்து தமிழ் சினிமாவை ஒரு பிடி பிடித்தார். வசனம், வார்த்தை வன்முறை, இரட்டை அர்த்த வசனங்கள்.... எல்லாவற்றிற்கும் அருமையான உதாரணங்களைச் சொன்னார். தாý செண்டிமென்ட் தமிழ் சினிமாவைப் படுத்தும்பாடு, அந்தக் காலத்து நாகராணி, இந்தக் காலத்து நீலாம்பரி (படையப்பா) என பெண் வக்கிரமாக சித்தரிக்கப்படுவது, பாடல்வரிகள் அரசாங்கத்தின் தணிக்கை விதிகளை மீறி வெளிவருவது, பாடல்களில் பெண்கள் வாகனங்களுக்கு ஒப்பிடப்படுவது...... என்று அனல் பறந்தது பேச்சு.... ""தமிழ் சினிமா மூன்று மணி நேரமும் சில ரூபாய்களும் அல்ல'' என்றார் பர்வீன்.
""சங்கப் பாடல்களில் பெண்பாற் கவிகளின் அகம்'' என்ற தலைப்பில் பேசினார் பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன். ""ஆண்பாற் புலவர்களைவிட பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை குறைவு'' என்றவர் உ.வே.சாமிநாதய்யர் 50 பேர் என்றும், ஒளவை நடராஜன் 41 பேர் என்றும், பேராசிரியர் ந.சஞ்சீவி 36 பேர் என்றும் குறிப்பிட்டிருப்பதைச் சொன்னார். ""சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பாடல்களிýருந்து அக்காலத்துப் பெண்களின் காதல், வீரம், பெரும்பாலும் பொருளாதாரத்தைத் தேடும் உரிமையின்மை, பெண்ணுக்கான இடம் பெரும்பாலும் வீடாக இருந்த, பரத்தையிடம் சென்று வரும் கணவரை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம், காதலன் வேறொரு பெண்ணோடு போய்விடாமýருக்க காதý செய்யும் முயற்சிகள், கைம்மைத் துயரம், உடன்-கட்டை ஏறுதல்.... எனப் பல்வேறு சமூக நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது'' என்றார் அவர். "கண்ணாடி' என்ற நாடகத்தை நிகழ்த்தினார் ப்ரீதம் சக்கரவர்த்தி. கண்ணாடி முன் நின்று ஒரு பெண் தன்னை அலங்கரித்துக் கொண்டே, சில அந்தரங்-கமான விஷயங்களை கண்ணாடியிடம் சொல்கிறாள். அவள் ஒரு நடிகை. இதுதான் கதை. ப்ரீதம் சக்கரவர்த்தி பிரமாதமாக நடித்தார். ஏற்ற இறக்கங்களுடன், நெகிழ்ச்சியாய், உணர்ச்சி கொப்பளிக்க அவர் பேசிய விதம் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டு விட்டது.
இரண்டாம் அமர்வில், "நவீன பெண் கவிதையியýன் அகம் புறம்' என்ற தலைப்பில் பேச வந்த ந.முருகேச பாண்டியன், ""ஒரு பெண் இப்படி எல்லாம் எழுதலாமா? பெண் இப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா? என்பது ஆரோக்ய-மற்ற போக்கு. திருவாசகத்தில் மாணிக்க வாசகர் கொங்கைகளைப் பற்றியே ஒரு பாடல் எழுதியிருக்கிறார். பட்டினத்தார் ஆபாசமாக எழுதினார். தற்போதைய பெண் கவிஞர்கள் பெண் என்பவள் தெய்வம், தாய், சக்தி என்ற பிம்பங்களை உடைத்து எறிகிறார்கள். இந்தக் கவிதைகளை கவிஞர் பிரம்மராஜன், "சானிடரி நாப்கின் கவிதைகள்' என்று சொல்கிறார். இது அயோக்கியத்தனம். மரபுவழிப்பட்ட கருத்தியலை தள்ளி வச்சுட்டுதான் இந்தக் கவிதைகளை பாக்கணும். இக்கவிதைகளை மாறுபட்ட பார்வை என்றுதான் நான் பார்க்கிறேன். இக்கவிதைகள் 2,000 வருட தமிழ்ச் சமூகத்தில் சில அதிர்வுகளை உண்டாக்கும்'' என்றார். இரண்டாம் அமர்விற்கு தலைமையேற்ற வழக்கறிஞர் அருள்மொழி, ""ஒரு பிரச்சனையின் அழுத்தம் என்பது நமக்குப் புரிந்ததை புரிந்த விதத்தில் சொல்வதுதான். அப்போதுதான் பிரச்சனையின் வý புரியும். அதனால்தான் பெண் கவிஞர்கள் இப்படியெல்லாம் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டி-ருக்கிறது'' என்றார்.
""ஒரு விபத்து செய்தி பேப்பரில் வந்திருந்தது. "36 பெண்கள் உட்பட 4 பேர் மரணம்' இந்தச் செய்தி எப்படி சரியா இருக்கும்? பஸ்ஸ÷ல ஒரு பொண்ணு தூங்கினா "எப்படி தூங்குறா பாரு! உருப்படுமா?'ன்னு சொல்வாங்க. ஒரு பொண்ணு சாப்பிட்டா, "என்ன தீனி திங்கிறா பாரு! வெüங்குமா?'ன்னு சொல்வாங்க. அது மாதிரிதான் தற்போது பெண் கவிஞர்கள் மீது நடக்குற தாக்கு தலும்'' என்றார் அருள்மொழி.
"பெண்களின் மீதான கலாச்சார கண்காணிப்பும், பெண் படைப்பு மீதான ஒடுக்கு முறையும்' என்ற தலைப்பில் பேசிய பா.செயப்பிரகாசத்தின் உரை விரிவான, ஆழமான உரை. சிற்றிதழ்களில் எழுதுகிற பெண்களை புஷ்பா தங்கதுரையுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. இவைகளைத் தகர்ப்பது எப்படி? அதற்காகத்தான் இந்த "அணங்கு' அமைப்பு'' என்று குறிப்பிட்டவர், ""நமக்கான வெளியீட்டகம் தேவை. பெண்களுக்கான இதழ் ஒன்றையும் துவங்க வேண்டும்'' என்றார்.
வழக்கறிஞர் அஜிதா, "பெண்ணுடல் மீதான சமூக வன்முறை' என்ற தலைப்பில் பேசினார். ""பெண்கள் மீதான வன்முறை அதிகமாகிக் கொண்டே போகிறது. 2,000லிஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான பெண்கள் 7,000 பேர்'' என்றவர் குர்லிஆன், பைபிள், ரிக் வேதம் ஆகியவற்றில் பெண்ணைப் பற்றிய மோசமான பிம்பம் உருவேற்றப் பட்டிருப்பதையும் குறிப்பிட்டார்.
"பெண் படைப்பு மற்றும் உடல் மீதான வெகுசன ஊடகங்களின் கருத்துருவாக்கம்' என்ற தலைப்பில் சுரேஷ் பாலும், (பெண்ணுடல் மீதான விசாரணையும் பாýயல் ஊடாட்டமும்' என்ற தலைப்பில் அமரந்தாவும் பேசினார்கள். காலையிýருந்து மாலை வரை நடந்தது கருத்தரங்கம். கணிசமான பார்வையாளர்கள். தற்போது தமிழில் சில பெண்கவிஞர்கள் பாýயல் பிரச்சனைகளை அதன் அழுத்தத்துடன் எழுதுகிறார்கள். அது சரிதான், என்பதே கருத்தரங்கின் அடிநாதமாக இருந்தது. அது சரியா? தவறா? என்று தீர்மானிக்க இது போன்ற கருத்தரங்குகள் திரும்பத்திரும்ப நடத்தப்பட வேண்டும். அந்தக் கருத்தரங்குகளில் இரு தரப்பினரும் ஆரோக்கியமான, தனிமனித தாக்குதலற்ற விவாதங்களை முன் வைக்க வேண்டும். விடை கிடைக்கும்.
http://tamil.sify.com/pennaenee/fullstory.php?id=13470464

0 Comments:
Post a Comment
<< Home